உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

மூன்று இலட்சத்திற்காக மூன்று கொலைகள்



மாலை 5:45 : லோகேஷ் என்பவர் தனது உதவியாளர் இருவருடன், தாஸின் வீட்டிற்குச் சென்று அவரது பண்ணை தோட்டத்தை பராமரிக்க இருவரைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அச்சமயத்தில் தாஸ் வீட்டில் தனியாக, மது அருந்திக் கொண்டு இருக்கிறார். லோகேஷ் அழைத்து வந்த இரண்டு நபர்கள் சரியாக இருப்பார்களா என்பதை முடிவு செய்ய வெளியில் சென்றுள்ள மனைவிக்கு போன் செய்து வரச்சொல்கிறார்.



லோகேஷ் மற்றும் நண்பர்கள் தாஸைத் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, கைகளைக் கட்டி குளியலறைத் தொட்டியில் கிடத்துகிறார்கள்.



பின் பீரோவிலுள்ள 110000 பணம், மற்றும் 2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொள்கிறார்கள், கூடவே ராயல் ஸ்டாக் மதுவினையும் எடுத்துக் கொள்கிறார்கள்.



மாலை 6:45 : பணம், நகை, இன்னபிறவைகளை மூட்டை கட்டி கிளம்பும் சமயத்தில் தாஸின் மனைவி வருவதை பார்க்கிறார்கள். ஆதலால் வீட்டில் மறைந்திருந்து அவர்களையும் தாக்கி கொலை செய்து, சிறுமி அக்னீசாவையும் கொலை செய்து குளியலறைத் தொட்டியில் போடுகிறார்கள்.



இரவு 9:30 : மூன்று கொலை செய்துள்ளதால் மாலையில் வெளியில் சென்றால் தெரிந்து விடும் என்பதால் வீட்டில் காத்திருந்து, பணநகைகளை பகிர்ந்து கொண்டு, தொலைக்காட்சியைப் பார்த்து ரசித்துவிட்டு இரவு 9 30 மணிவாக்கில் கலைந்து செல்கிறார்கள்.


இச்சம்பவம் பெங்களூரில் நடந்தது. பல வருடங்களாகத் தனக்கு தெரிந்த நபர் தமது நண்பர்களுடன் சேர்ந்து வெறும் 3 இலட்ச மதிப்பிற்காக மூன்று நபர் திட்டமிட்டு மூன்று கொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். மதிப்பு வாய்ந்த மூன்று மனித உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொலையை நிகழ்த்தியவர்கள் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் அல்லர், சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம் என அவர்கள் முடிவெடுத்து குற்றங்களைச் செய்திருக்கிறார்கள். இப்பதிவு நாமும் நமது சுற்றமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதை உங்களுடன் பகிர்வதற்காகத் தான்.

மேலும வாசிங்க...

நவீன திருவிளையாடல்

மேலும வாசிங்க...

அழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம்

Ruins of Northern Sri Lanka 2009 from shedali on Vimeo.

மேலும வாசிங்க...

இந்திய அரசு செம்மொழி நிறுவன விருது அறிவிப்பு

தமிழ் சங்க இலக்கியங்களில் ஆய்வுகள் பல மேற்கொண்டு வெவ்வேறான தகவல்களை வெளிக்கொணரும் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் விருதுகளை அறிவித்திருக்கிறது.

எமது நண்பரும், புதுச்சேரி பலகலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிபவருமாகிய முனைவர் திரு மு.இளங்கோவன் அவர்களுக்கு செம்மொழி இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியர்கள் அடிகளாசிரியர், ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களுக்கு தொல்காப்பிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழுக்காகத் தம் நேரங்களை ஒதுக்கி, ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு, உழைக்கும் தமிழறிஞர்களுக்கு இவ்விருது ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும், மேலும் தமிழ் இளைஞர்கள் இவ்வகைப் பணிகளில் ஈடுபட ஊக்கப்படுத்தும். இவ்விருதினைப் பெறும் மு.இளங்கோவன், அடிகளாசிரியர், ஜார்ஜ் ஹார்ட்டு ஆகியோருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாசகர்களும் தாங்களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும வாசிங்க...

850 ரூபாயில் ஒரு குறும்படம் : பரசுராம் வயது 55

தான் இப்படத்தை வெறும் 850 ரூபாய்க்கு எடுத்தாகக் கூறும் ஜாக்கிசேகரின் குறும்படத்தைப் பாருங்கள். மேலும் விபரங்களுக்கு இப்ப்குதியைப் பாருங்கள்.


மேலும வாசிங்க...

போங்கடா .. நீங்களும், உங்க..


இந்த மாதிரியான தொண்டர்கள் இருக்கிற வரைக்கும்,

யாரும் அடிச்சிக்கவே முடியாது..

அத்துடன் விடுதலை என்றால் என்னவென்று
அறியா நிலையில் இன்னும் திமுக தொண்டன்
இருக்கிறான் என்பது வெளிச்சம்.

நமது வருத்தமெல்லாம் - இதைப்
பார்க்கும் இலங்கைத் தமிழனின்
நிலையைப் பற்றித்தான்..

( பதிவிற்கும், தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லை )


மேலும வாசிங்க...

அக் 11 சென்னையில் தமிழினப் பாதுகாப்பு மாநாடு

மேலும வாசிங்க...

நோபல் பரிசு : வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

தமிழகத்திலுள்ள சிதம்பரத்தில் பிறந்து, பின் குஜாராத்தில் பள்ளிக்கல்வி, பரோடா பல்கலைக் கழகத்தில் கல்லூரியை ஆரம்பித்து, அமெரிக்காவிலுள்ள ஓஹியோ பல்கலைக கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று என வெவ்வேறு நிலைகளில் பயின்று இன்று வேதியியலுக்கான(Chemistry) நோபல் பரிசை பெறும் திரு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில், அவர் நம் மண்ணில் பிறந்தார் என்னும் பெருமிதமும் கொள்வோம்.


ரைபோசெம் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக இவ்விருதினைப் பெறும் வெங்கட்ராமன் அவர்களுடன் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.வெங்கட்ராமன் அவர்களின் தந்தை ராமகிருஷ்ணன், தாய் ராஜலட்சுமி இருவரும் பல்கலைப் பேராசிரியராய் பணிபுரிந்தவர்கள். வெங்கட்ராமன் தற்போது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஸ் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளாராய் பணி புரிந்து வருகிறார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசினைப் பெற்ற மூன்றாவது தமிழராக வெங்கட்ராமன் திகழ்கிறார். இவருக்கு முன்னதாக சர்.சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்காகவும், சுப்பிரமணியன் சந்திரசேகர் 1988 ல் இயற்பியலுக்காவும் பெற்றனர்.

மேலும வாசிங்க...

திரட்டிகள்

Tamilish More than a Blog Aggregator :: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines ulavu.com Add to your blog