நித்யானந்தா - யார் செய்த தவறு ?!

1 மறுமொழிகள்

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாய் நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகள் பரபரப்பாகி பேசப்பட்டு வருகிறது. கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாகவும், ட்விட்டரில் அதிகமாக ட்விட் செய்யப்பட்டவையாகவும், அலுவலகம், டீக்கடை, பொதுஇடம் என கூடுமிடமெல்லாம் இதைப் பற்றிய விவாதமாகவே உள்ளது.

ஆனந்த விகடன், குமுதம் போன்ற வார இதழ்களில் காணப்படும் ஆன்மீகக் கட்டுரைகள் வாழ்க்கையை வழிப்படுத்தும் பணிகளை நமக்குத் தருகின்றன. விகடன் பிரசுரத்தின் மூலம் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் 'மனம் மலரட்டும்' எனும் புத்தகம் வாங்கி படித்திருக்கிறேன். அதுபோலவே குமுதத்தில் வெளிவந்த 'கதவைத் திற காற்று வரட்டும்' எனும் தலைப்பில் நித்யானந்த எழுதி வந்த தொடர் எனக்கு மட்டுமல்லாமல் ஏனைய தமிழர்களுக்கும் நித்யானந்தாவை அறிமுகப்படுத்தியல் பெரும்பங்கு உள்ளது. குமுதம் கொடுத்த அறிமுகத்தில் சில நாட்களில் நித்யானந்தாவின் சொற்பொழிவு ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து விசாரித்ததில் அந்த சொற்பொழிவில் கலந்து கொள்ள ரூ 500 என்றார்கள். அப்போதே நினைத்தேன், இவர்கள் பண்ணுவதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான் என்று. அதே போல் கல்கி ஆசிரம தரிசனம் ஒன்றிற்கும் நண்பர் ஒருவர் சென்று வந்தார், அவரிடம் வினவியதில் தரிசனத்திற்கு ரூ 500 என்றார்கள். கல்வி நிலையங்கள் பெரும் வியாபாரமாகி அதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் நாட்டை வேறுவழிக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிற தருணங்களில் ஆன்மீகம் கல்வி வியாபாரத்தை மிஞ்சியதாய் காணப்படுகின்றது. நித்யானந்தரின் செல்வாக்கு என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஆண்டுகளாகவே உள்ளது, ஆனால் அவரது சொத்துக்கள், ஆசிரமக் கிளைகள், பரப்பப்படும் விளம்பரங்கள் ஆகியவற்றைக் காண்கையில் ஒரு வெற்றிபெற்ற தொழிலபதிர்களுக்கு ஈடான அனைத்து விளம்பர உத்திகளும் கையாளப்பட்டு வருவதை மக்கள் யோசிக்க வேண்டும்.

சினிமாக்களிலும், கதைகளிலும் கடவுள் தோன்றி மறைந்து அருள் பாலிப்பதைப் போன்ற எந்த நிகழ்வுகளும் எந்த மதத்திற்கும் இந்த உலகில் நடப்பதில்லை. ஆனால் கடவுளின் அவதாரங்கள், மனித தெய்வம் எனச் சொல்லிக் கொள்ளும் இவ்வகை கடவுளின் முகவர்களை மக்களாகிய நாமும், நமது அரசாங்கமும் சற்றே தெளிவான பார்வையுடன் இவர்களை அணுக வேண்டும்.


நித்யானந்தா செய்த தவறு என்ன ?

சட்டப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் சம்மதத்துடன் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளையும் குற்றமென இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்வதில்லை. ஆனால் நம்பிக்கையை ஏற்படுத்துபவரும், நம்பிக்கையை ஏற்படுத்த சொற்பொழிவுகள் ஆற்றியும், ஏராளமான தொடர்கள், புத்தகங்கள் எழுதியும், ஆசை, ஆன்மீகம், சந்நியாசம், மனதைக் கட்டுப்படுத்துதல், கடவுளின் அவதாரம், மனித தெய்வம், தெய்வ மனிதன் என ஏனைய விளக்கங்களைக் கொடுத்து வருபவருமாகிய நித்யானந்தா, தன்னைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மனங்களுக்கு அவரின் பின்புலங்கள் அளிக்கின்ற ரகசிய அதிர்ச்சிகளே குற்றமாகும். அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அளிக்கின்ற செயல்களில் ஈடுபட்டது குற்றங்களாகும்.

தோண்டத் தோண்டத்தான் நிறைய குற்றங்கள் வரும். பூனைக்கு தற்சமயம் மணிகட்டியாகி விட்டது. இனி இது வரையில் புகார் கொடுக்கப்படாமலிருந்த ஏனைய புகார்கள் நித்யானந்தாவிடம் பாய்ந்து அவரை ஒருவழியாக்கமால் சும்மா இருக்கப் போவதில்லை. பார்ப்போம் இது எந்தளவுக்கு பாயுமென்று... அல்லது பதுங்குமென்று...

ஊடகங்கள் செய்த தவறு ?!

தமக்கு வீடியோ கிடைத்தது என்பதற்கான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணும் தொலைக்காட்சியில் அத்தனை காட்சிகளையும் ஒளிபரப்பப் தேவையில்லை. வெறும் புகைப்படங்களை மட்டும் காட்டியிருக்கலாம். ( இருந்தாலும், இவர்களின் நிகழ்ச்சிகளில் வருகின்ற நடன இயங்கக்களைக் காட்டிலும், கம்மி தான்.. ) ஊடகத்தின் உச்ச கட்டமாய் முழுவீடியோவைப் பெற சந்தா கட்டுங்கள் என நக்கீரம் கூறியது தான். ஆபாச வீடியைவைக் காட்டி தமக்கு கல்லா கட்டியதை என்னவென்று சொல்வது ?! கதவைத் திற காற்று வரட்டும் என இவரை அறிமுகப்படுத்திய குமுதம் தவறான ஒருவரை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் கூட்டத்தில் கோவிந்தாவாக ‘நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள்’ என லிங்க் கொடுப்பதும் எந்த வகை எனத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் தவறு என்ன ?

கட்டுக்கடங்காமல் தனது தொழிலை விரிவுபடுத்திக் கொண்டு தமக்கான சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்டு கொட்டிக்கிடக்கின்ற கோடி கோடியான பணங்களுக்கு கணக்கு என்னவென்பதை அரசாங்கம் நெருங்குவதுமில்லை, நெறிப்படுத்துவதும் இல்லை. மாறாக ஆளும் அரசாங்க பக்திமான்களும் ஆன்மீகவாதிகள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதால் காவல்துறை போன்றவர்கள் இவர்களிடம் கைவைப்பதில்லை. ஆன்மீகம் எனும் போர்வையில் இவர்கள் பண்ணும் அனைத்தும் அட்டூழியங்களுக்கும் அரசாங்கம் துணை போவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றதே ?!

ஆக, அரசாங்கம் இவ்வகை ஆன்மீகப் புள்ளிகளை நெறிப்படுத்துவதற்கான சட்டமியற்ற முறையான வகையில் செய்ல்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

மக்களின் தவறு என்ன ?

எத்தனை முறை ஏமாந்தாலும் அந்த நோயைக் குணப்படுத்துகிறார், இந்த நோயைக் குணப்படுத்துகிறார் என்று ஆங்காங்கே கூறுவதைக் கேட்டு விட்டு சாமியார்களின் முன் விழவைக்கின்ற நம்பிக்கை தான்.

மேலும் விரிவாகப் படிக்க...

கலைத்தாயின் தோளில் கமலஹாசன்

0 மறுமொழிகள்


கமலஹாசனின் கலைச்சேவையைப் போற்றும் வகையில் ரஜினி கமலுக்கு பரிசளித்த ஓவியம்.

நன்றி: ஆனந்த விகடன்.

மேலும் விரிவாகப் படிக்க...

தாழ்தள முழுக்கால் சட்டை ( Low Waist Pant)

0 மறுமொழிகள்


மேலும் விரிவாகப் படிக்க...

4. நினைவலைகள் - ’ஊருவிட்டு ஊருவந்து’

4 மறுமொழிகள்
நினைவலைகள் தொடரை ஏதோ வேகத்தில் ஆரம்பித்து பலப்பல வேலை, கவனச் சிதறல்களால் தொடராமல் விட்டுவிட்டேன். தற்போது ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்து ஆரம்பிக்கின்றேன். வாருங்கள் நினைவலைக்குள் பயணிக்கலாம்...



சென்ற தொடரில் குறிப்பிட்டது போல எங்களின் சொந்த ஊரைக் காலி செய்து விட்டு வேறு ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததாலும், வீட்டிலுள்ள மொத்த குடும்பத்தினரின் எண்ணிக்கை (8) பேராக இருந்த காரணத்தினாலும் வேறு எதாவது செய்து வருமானம் பார்த்தால் தான் என்ற நிலை உருவாகி இருந்தது. எங்கள் ஊர்க்காரர்கள் பலர் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து இருக்கிறார்கள். அன்றாட வருமானத்துக்கு குறைவில்லாமல் வேலையும் கிடைக்கும், பிழைப்பும் நடக்கும் என அறிந்து எனது தந்தை தெரிந்தவர் மூலம் அங்கு சென்று பார்த்திருக்கிறார். தனக்கான ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொண்டவர் ஒரு மாத காலம் தங்கியிருந்து வேலை பார்த்திருக்கிறார். வேலையும், இடமும் பிடித்துப் போகவே ஒரு மாதத்திற்குப் பின் எங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஊரை விட்டுச் சென்றோம்.

அந்நாட்களில் பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஜாதிகள் இல்லையடி பாப்பா ! குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எனும் பாரதியின் வரிகளை எழுதி ஆசிரியையிடம் காட்டும் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம் என்றே நினைக்கிறேன். பள்ளி நிர்வாகத்திடம் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு பாத்திரம், பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு எங்கள் ஊரின் தெருக்களில் நடந்து ஊரைக் காலி செய்ததை இன்றும் நினைவிலிருக்கும் நிகழ்வுகள்.

மரியாதையுடனும், சிறப்புடனும் பல தலைமுறைகள் வாழ்ந்த குடும்பம் இன்று பிழைப்புக்காய் வேறு ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று கனத்த மனதுடன் நாங்களும், ஊர்க்காரர்களும் கண்ணீருடன் விடைபெற்றோம். எங்கள் ஊரிலிருந்து T.கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ரிசர்வ்லைன் வழியாகச் சென்று அங்கிருந்து பாரைப்பட்டி என்னும் ஊருக்குச் சென்று சேர்ந்தோம்.

பாரைப்பட்டி சிவகாசியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மிகச்சிறிய கிராமம். விவசாயம் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லையென்றாலும் பெருமளவு மக்கள் அருகிலிருக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளிலேயே பணிபுரிந்தனர். எனது சொந்த ஊரான கிருஷ்ணாபுரம் பகுதியானது கரிசல் மண் வகையைச் சார்ந்தது. ஆனால் சிவகாசி பகுதி செம்மண் வகையாக அமைந்திருந்தது. தரையைத் தோண்டினால் செம்மண்ணாகத் தான் இருக்கும்.

பாரைப்பட்டி ஏறக்குறைய ஐநூறு வீடுகளைக் கொண்ட மிகச்சிறிய கிராமம். கிராமத்தின் ஆரம்பத்தில் ஒரு முத்தாலம்மன் கோவில், சிறியதாய் ஒரு ஊரணி, சிறு மைதானம் (சினிமா, நாடகம் போடுவதற்கு ஏற்றார் போல்), டீக்கடை, மளிகைக் கடை என கிராமத்தின் அனைத்து அம்சங்களும் கொண்டது. இக்கிராமத்தின் ஒரு புறத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அமைந்திருந்தது.

பெட்டி படுக்கைகளுடன் வந்த நாங்கள் ஏற்கனவே எங்கள் அப்பா பார்த்து வைத்திருந்த வீட்டில் குடியேறினோம். ஒரே ஒரு அறை, அதன் மூலம் அடுப்பு என மிகவும் அடக்கமாயிருந்தது வீடு. அதற்கான வாடகை ரூபாய் 30 என நினைக்கிறேன். நான், எனது சகோதரர், சகோதரி மூவரும் பக்கத்து ஊரான ஆவரம்பட்டியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிலநாட்கள் சென்று கொண்டிருந்தோம். பின் ரிசர்வ்லைனில் உள்ள அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் முறையாகச் சேர்க்கப்பட்டோம்.

ரிசர்வ்லைன் என்பது சிவகாசி அருகிலுள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். நான் வசித்த பாரைப்பட்டிக்கு பேருந்து வசதியெதுவும் இல்லை, எதுவானாலும் ரிசர்வ்லைனுக்கு தான் வர வேண்டும். ரிசர்வ்லைனில் சிறப்பம்சமாக ராசி எனும் திரையரங்கம், காவல் துறையினர் வசிப்பதற்கான காலனி, பயிற்சி மைதானம், ஒரு மரத் தொழிற்சாலை, நான் படிக்கும் பள்ளி அவ்வளவு தான். மற்றபடி பட்டாசு தயாரிப்புகளுக்குத் தேவையான பொருட்களை தயார் செய்யும் அளவுக்கான சிறுதொழில்களும், தீப்பெட்டி பெட்டியை உருவாக்குவது போன்ற சிறிய குடிசைத் தொழிலுமாக இருந்தது.

இப்பள்ளியில் சந்தித்த புதிய அனுபவங்களையும், புதிய ஊரில் சந்தித்த புதிய மனிதர்களையும் அடுத்த பகுதியில் தொடர்கிறேன். அதுவரை

மேலும் விரிவாகப் படிக்க...

பூம்புகார் ப்யணங்களில்.. - Journey to Poompuhar

2 மறுமொழிகள்
சிதம்பரம் அண்ணாமலைப்பலகலைக்கழகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கை முடித்துக்கொண்டு ஒரிசா பாலு அவர்களின் அழைப்பின் பேரில் பூம்புகார் செல்ல முடிவெடுத்தோம். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முனபு கல்லூரி படிக்கையில் திருமணம் ஒன்றிற்காக சிதம்பரம் சென்று விட்டு பூம்புகார் சென்றிருக்கிறேன். அப்போது செல்லும் பொழுது மாலையாகி விட்டதால் வெறும் கடற்கரையை மட்டும் ரசித்து விட்டு ஒரே ஒரு நிழற்படம் எடுத்து வந்ததாய் ஞாபகம். ஒரிசா பாலு அவர்கள் கடலாய்வுப்பணியில் மேற்கொண்டு வருகிறார். நாகர்கோவில் இணையப்பயிலரங்கில் சந்தித்த போது கன்னயாகுமரியில் கடலாய்வு மேற்கொண்டிருந்தார். சிதம்பரம் பயிலரங்கில் கலந்து கொண்ட போது பூம்புகாரில் கடலாய்வும், வரலாற்று ஆய்வாகவும் சில பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாயிருந்ததால் நானும் செலவமுரளியும் அவருடன் பூம்புகார் செல்ல ஆர்வமுடன் இருந்தோம்.

”படங்களைச் சொடுக்கி பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்”

பூம்புகாரில் பிறந்தவரும், பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டவருமான புலவர் நா.தியாகராசன் அவர்கள் ஒரிசா பாலு அவர்களுடன் ஆயவு உதவிக்காக வந்திருந்தார். நால்வரும் மாலை 6 மணிக்கு கிளம்பி சிதம்பரத்திலிருந்து கருவி சென்று, பின் பூம்புகார் இரவு 9 மணிக்குச் சென்றடைந்தோம். பூம்புகாரிலுள்ள தமிழகம் உணவு விடுதியில் இரவு உணவை முடித்து விட்டு ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த அரசு விருந்தினர் மாளிகையினில் தங்கினோம். விருந்தினர் மாளிகை அறை மிகவும் பிரதானமாகவும் அழகுற க்டற்கரையின் மிக அருகில் அமைந்திருந்தது.

”நீதி கேட்டு தலை விரித்த கோலத்துடன், சிலம்புடன் கைகளை நீட்டியுள்ளதைப் போலல்லாமல் கண்ணகி, கடவுளாக உருவகம் செய்யப்பட்டு அழகுற வலது கைகளை அருள் பாலிப்பது போல் அமைத்து, அணிகலன்கள் அணிந்து கால் சிலம்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது”


ஜன்னலில் இருந்து வெளிப்படும் கடற்கரைக் காற்று தென்றலாய் இதமான உணர்வை ஏங்களுக்கு வீசிக்கொண்டிருந்தது. கல்பனா சேக்கிழார் அவர்கள் சிதம்பரத்தில் கொடுத்து அனுப்பியிருந்த மாதுளை பழமும், ஆப்பிளும் சாப்பிட்டுக் கொண்டு வெளிவரும் கடற்கரைக் காற்றில் அமிர்தமாய் இருந்தது. சற்று நேர அரட்டை முடித்து விட்டு கடற்கரைப் பக்கம் சென்று உலா சென்று வரலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அசதியால் சோம்பலுடன் நடக்க மனமின்றி தூங்கிப் போனோம். கடற்கரை அலையின் வேகமும், ஒலியும் மிக வேகமாகவே இருந்தது. கடல் அலையின் ஒலியிலும், அதிகமான பயணத்தின் அசதியிலும், இதமான காற்றிலும் இனிய உறக்கம் எங்களை எளிதில் ஆட்கொண்டது.


அதிகாலை வேளையில்

இரவு அனுபவித்த அதே கடல் அலை சத்தத்துடனும், தென்றல் காற்றுடனும் காலை 5 30 மணிக்கெல்லாம் எழுந்து கடற்கரை உலா வர தயாரானோம். அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியில் சிறிது தூரத்தில் கண்ணகியின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதி கேட்டு தலை விரித்த கோலத்துடன், சிலம்புடன் கைகளை நீட்டியுள்ளதைப் போலல்லாமல் கண்ணகி, கடவுளாக உருவகம் செய்யப்பட்டு அழகுற வலது கைகளை அருள் பாலிப்பது போல் அமைத்து, அணிகலன்கள் அணிந்து கால் சிலம்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்ணகி சிலை

இரவு இருந்ததைப் போலவே அலையின் வேகம் மிக அதிகமாகவே இருந்தது. ஒரிசா பாலு அவர்கள் சிறுவயதில் பூம்புகார் வந்ததையும், கடல்நீர் எந்த அளவு உள்வாங்கியுள்ளது என்பதையும், பூம்புகார் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார். அதிகாலை என்பதனால் கடலின் அலைகளைத் தவிர அனைத்தும் கும்மிருட்டாக் இருந்தது. கடற்கரை ஓரங்களில் மண் அரிப்பைத் தடுப்பதற்கெனவும், அலையின் வேகத்தை கட்டுப்படுத்தவும் மலைபோல் இருபது அடிகள் அளவிற்கு கருங்கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. கடற்கரை மணலை தரிசிக்க, கடல்நீரில் கால்களை நனைக்க இருநூறு மீட்டர் வலதுபுறத்தில் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

இனிய கடல்காற்றை ரசித்தபடி பேசிக்கொண்டே கடற்கரை மணலில் நடந்தபடி சூர்ய உதயத்திற்காக காத்திருந்தோம். இதற்கிடையே நானும், செல்வமுரளியின் கடலலைகளில் கால்களை நனைத்து கடல்செல்வங்களை அள்ள முயன்று கொண்டிருந்தோம். சிப்பி, சங்கு போன்றவைகளை அலையூனோடே கை, கால்களினால் அரவணைத்து கைப்பற்றி கரையில் ஒதுக்கி சேமிக்கலானோம். மேகங்களின் மறைவினில் உதித்த சூரியன் ஆறுமணியாகியும் கண்களில் தென்படவில்லை.


காலை 6 30 மணியளவில் தம் செந்நிற கதிர்களைப் வானில் பரப்பி தன்னிகரில்ல தன்மையுடன் எழுந்த சூரியன் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளித்தது. மேலெழும்பிய சூரியனை பிடிப்பது போல், தாங்குவது போல் அமைந்த நிழற்படங்களை ஒரிசா பாலு அவர்கள் அழகுற எடுத்தார். நிழற்பட எடுக்க கேமரா கொண்டு


வரவில்லையாததால் என்னுடைய 2MP கொண்ட பிளாக்பெர்ரி மூலம் எடுத்துத் தள்ளினோம். தேவையான அளவு நிழற்படங்களையும், கடலலைகளையும், சூரிய உதயத்தையும் ரசித்து விட்டு, கைப்பற்றிய சிப்பிகளுடன் விடுதி செல்ல தயாரானோம். வழியில் கலைங்கரை விளக்கமும், அழகுற வடிவமைக்கப் பட்டிருந்த விளக்குத்தூண் அருகிலும் நின்று நிழற்படம் எடுக்கத் மறக்கவில்லை.

அ) விளக்குத்தூண் ஆ) கலங்கரை விளக்கம்

கடற்கரை அழகை ரசித்து முடித்த பின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இலஞ்சி மன்றத்திற்குச் சென்றோம். பண்டைய கால வரலாற்றில் இங்கே குளம் அமைக்கப்பட்டிருந்துள்ளது. அவற்றை நினைவு கொள்ளும் வகையில் தமிழக அரசின் மூலம் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கீழ்க்கண்ட படத்தில் காணப்படுவதைப் போன்ற மூன்று கட்டிட அமைப்புகளும் ஒருங்கே சிறப்புடன் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் இருமருங்கிலும் குளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குளத்திலுள்ள தண்ணீர் தான் மாசடைந்து காணப்படுகிறது.
இளஞ்சி மன்றம்

அறைக்குச் செல்லலாம் என முடிவெடுத்த நிலையில் தேனீர் அருந்தலாம் எனத் தோணவே சிறு தொலைவில் இருக்கும் தேநீர் கடைக்கு செல்ல ஆரம்பித்தோம். கடறகரையில் இருந்து செல்லும் சாலையின் வலது புறத்தில் பாவை மன்றம் ஒன்று உள்ளது. கீழ்க்காணும் படத்தில் கூறப்பட்டுள்ளது போல எட்டு வகையான தோற்றங்களும், முகபாவங்களும் கொண்ட உருவங்களை எட்டு தூண்களில் அமைந்துள்ளது. காலை 7 மணி நேரமாதலால் இது பூட்டப்பட்டிருந்தது.ஆகையினால் வெளியில் நின்று கண்டு ரசித்து விட்டு நகர்ந்தோம்.

பாவை மன்றம்

சிறிது தூரத்தில் சாலையின் இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் உள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்ப வடிவை ஒத்ததாய் அமைந்திருந்தன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கபெற்று கண்கவர் காட்சியாய் அமைந்திருந்தது.

சிலப்பதிகாரக் கலைக்கூடம்

இக்கலைக்கூடத்தில் சிலம்பு வடிவ குளம், 3 மீட்டர் உயரமுள்ள கண்ணகி சிலை, 2.75 மீட்டர் வடிவ மாதவியின் சிலை, சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளின் சிலை, சோழ ஆட்சி புரிந்த கரிகால் சோழனின் சிலை மற்றும் சிலப்பதிகாரக் கதையில் வரும் 49 நிகழ்ச்சிகள் கல்லில் வடிவமைக்கப்படுள்ளன.



அங்கிருந்து சிறிது தூரத்தில் சாலையின் வலதுபுறத்தில் பேருந்து நிலையமும் சிலம்பு வடிவில் அமைந்திருந்து. ஆனால் அவை இன்னும் கட்டி முடிக்கப்படாமல் பயன்பாடின்றி காணப்பட்டுள்ளது. அதன் பின் தேநீர் அருந்திவிட்டு வரும் வழியில் அகழ்வியல் நிலையம் என்றழைக்கப்படும் அரிய பொருட்களை உடைய நிலையத்திற்குச் சென்றோம். அங்கு பூம்புகார நகரின் பலபகுதியில் கிடைக்கப்பெற்ற அரிய வகைப் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கபட்டிருந்தது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிலம்புகள், மணிகள், பாசிகள், புலித்தோற்றம் கொண்ட படகுகள், ஓடங்கள், கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், ஆவணங்கள், கிடைத்த பொருள்களின் பட்டியல்கள், கல்வெட்டுக்கள், இலக்கியக் குறிப்புகள், பூம்புகார் பற்றிய நூல்கள் பட்டியல்கள், படகுத்துறை படங்கள், 2 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சிப்பி, வெளிநாடுகளில் கிடைக்கப்பெற்ற தமிழ்க் கல்வெட்டுக்கள், 7 ம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற அய்யனார் சிலை, 7ம் நூற்றாண்டு அய்யனார் சிலை, 5ம் நூற்றாண்டு நங்கூரம் என அரிய வகைப் பொருட்களை உள்ளடக்கியதாய் அமைந்துள்ளது.





இவையனைத்தையும் பார்த்து ரசித்தி விட்டு, ஒரிசா பாலு அவர்கள் மேலும் பல ஆராய்வு பணிகள் இருந்தமையால் நானும், செல்வமுரளியும் காலை 10 மணியளவில் பூம்புகாரை விட்டு கிளம்பிச் சென்றோம். பார்க்கவேண்டிய மேலும் பல இடங்களைக் காணும் வாய்ப்பை நேரமின்மையால் இழந்து வேறொரு நாள் வந்து பார்க்கலாம் எனும் எண்ணத்தில் பூம்புகாரிலிருந்து இனிய நினைவுகளுடன் கிளம்பிச் சென்றோம்.

பூம்புகார் எப்படிச் செல்வது :

சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது.

வழித்தடங்கள் : சென்னை - பாண்டிச்சேரி - கடலூர் - சிதம்பரம் - சீர்காழி - கருவி - பூம்புகார்.






மேலும் விரிவாகப் படிக்க...

பூம்புகார் மண்ணில்

0 மறுமொழிகள்
கடற்கரை செல்லும் சாலையின் முகப்புத் தோற்றம்




சிலப்பதிகார கலைக்கூடம்


கடற்கரையில் அமைந்திருக்கும் கண்ணகி சிலை

அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து


கலங்கரை விளக்கம்

விளக்குத்தூண்


பூம்புகார் கடற்கரையில்


காவிரி புகும் பட்டிணத்தில் இருந்து


மேலும் விரிவாகப் படிக்க...

புலவர் நா.தியாகராசன் அவர்களுடன்

0 மறுமொழிகள்


புலவர் நா.தியாகராசன், ஒரிசா பாலு ஆகியோருடன்.

தமிழ்ப் பண்பாட்டுக்கும், தமிழின வரலாற்றுக்கும் இன்றும் ஆதராமாய் விளங்கிடும் பூமியாக பூம்புகார் விளங்குகிறது. இப்புண்ணிய பூமியின் தோன்றலாய் புலவர் நா. தியாகராசன் விளங்குகின்றார். இம்மண்ணின் பெருமைகளையும், ஆதாரங்களையும் வெளிக்கொண்ரும் வகையிலான எண்ணற்ற பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார். பூம்புகாரின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த எண்பதாண்டு காலமாக எட்டுத்திக்குகளிலும் நடந்து இவர் பாதம் படாத இடமே இல்லை எனும் அளவிற்கு ஆய்வுகளை மேற்கொண்ட தியாகராசன் பெரும் உழைப்பை நல்கி இருக்கிறார்.

இந்திய தொல்லியல் துறையினரின் 1963 தொடங்கி 1972 வரை நடைபெற்ற புதைபொருள் ஆய்வில் நா. தியாகராசன் அவர்கள் உடனிருந்து, வேண்டும் உதவிகளைச் செய்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்திருக்கிறார். எண்பதைத் தாண்டிய வயதிலும் சுறுசுறுப்பாய் களப்பணியாற்றி வரும் இவர் தம் பணிக்கு தமிழுலகம் பெரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

மேலும் விரிவாகப் படிக்க...

சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் தமிழ் இணையப் பயிலரங்கில்..

0 மறுமொழிகள்




சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கில் பிளாக் உருவாக்கம், பயன்கள், செயல்பாடுகள், பதிவிடுதல், பண்படுத்துதல், கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய பயிற்சியில் நான்.

மேலும் விரிவாகப் படிக்க...

லிமேசன்

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES